மகாராஷ்டிர அரசின் 'புன்னகை தூதராக' சச்சின் நியமனம்

x

மகாராஷ்ட்ராவின் 'புன்னகைத் தூதராக' கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்ட்ராவை தூய்மை மாநிலமாக மாற்றும் முயற்சியாக, அதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 'ஸ்வச் முக் அபியான்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்கான புன்னகைத் தூதராக, சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்