சபரிமலை மேல் சாந்தி பதவிக்கு விண்ணப்பிக்கும் விவகாரம் - இன்று விசாரணை

x

சபரிமலை மேல் சாந்தி பதவிக்கு கேரளாவில் பிறந்த பிராமணர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிராக மனு, கேரளா உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகைப்புரம் கோயில்களில் மேல்சாந்தி பதவிக்கு விண்ணப்பிப்போர், கேரள பிராமணராக இருக்க வேண்டும் என் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிபந்தனை விதித்த‌து.

இது அரசியல் சாச‌னம் உறுதி செய்த அடிப்படை உரிமைகளை மீறுவதாக‌க் கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்