சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு - பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

x

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்கவுள்ளது. இதற்காக கோயில் நடை, இன்று திறக்கப்படுகிறது. நாளை தொடங்கும் மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திறக்கப்படும் கோயில் நடை, ஜனவரி 20 ஆம் தேதி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்