உள்ளே வந்த ரஷ்யா..! - திடீர் அறிவிப்பை வெளியிட்ட உக்ரைன்... | Russia | Ukraine

x

சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் தொடரில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்பதால் உக்ரைன் விலக முடிவு செய்துள்ளது. உக்ரைன் போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உலக ஜூடோ சாம்பியன்ஷிப் தொடர் வரும் 7 முதல் 14ம் தேதி வரை கத்தாரில் நடைபெற உள்ள நிலையில், இப்போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போரை நடத்தி வரும் ரஷ்யாவை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இத்தொடரில் ரஷ்யாவுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், தாங்கள் விலக முடிவு செய்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்