உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

x

உக்கிரமடைந்த ரஷ்யா...உக்ரைன் மீது பொழியும் ஏவுகணைகள் - கிரிமியா பாலம் தாக்குதலுக்கு பதிலடி

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக, தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களின் மீது ரஷ்யா 75க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த ராக்கெட் தாக்குதலால் உக்ரைனில் பல பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்