திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் திடீர் கைது

x

திமுக குறித்து பொய் செய்தி பரப்பியதாக, ஆர்.எஸ்.எஸ்‌. பொறுப்பாளரை திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். திமுக நிர்வாகிகள் ஐந்து பேரின் புகைப்படத்தை மார்பிங் செய்து, சாராயம் காய்ச்சியதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் சரவண பிரசாத் மீது திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், ஆர்.எஸ்.எஸ்‌. பொறுப்பாளர் சரவண பிரசாத்தை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்