இன்று ஆர்எஸ்எஸ் பேரணி - 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

x

ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவதை ஒட்டி, விழுப்புரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த, அந்த அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, விழுப்புரத்தில், மாலை 3 மணிக்கு ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேரணி, நான்குமுனை சந்திப்பு, பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம், காந்தி சிலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது. இதையொட்டி, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேரணி செல்லும் இடங்களில், மோப்ப நாய் உதவியுடன் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்