3 இடங்களில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி.. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

x

தமிழகத்தில் 3 இடங்களில் நேற்று ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது.

கடலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியை ஒட்டி கடலூர் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. பேரணிக்கு பின் சிறிய அளவிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே, பேரணியின் வீடியோ மற்றும் போட்டோக்களை நீதிமன்றத்தில் கொடுத்து, மற்ற 47 இடங்களிலும் பேரணி நடத்துவதற்கான அனுமதியை பெறுவோம் என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்