ரூ.2000 நோட்டு வாபஸ் வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு எதிரான பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமில்லை என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. வழக்கறிஞர் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com