அரசு வேலைக்கு ரூ.12.50 லட்சம் மோசடி... மிரட்டல் விடுத்த காவல் அதிகாரிகள்

x

அரசு வேலைக்காக பணமோசடி செய்ததாக கூறப்படும் நபரின் வீட்டின் முன்பு, பாதிக்கப்பட்டவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக, 3 பேர் மீது போலீசில் புகார் அளித்தார்.

தலைமறைவான அவர்களை தேடிச் சென்றபோது, காவல்துறை அதிகாரிகள் சிலர் போனில் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இழந்த தனது பணத்தை மீட்டுத்தரவும், தங்களை மிரட்டிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இந்நிலையில் பணத்தை வாங்கி ஏமாற்றிய நபரின் வீட்டிற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்