ரூ. 22 லட்சம் பில் பாக்கி... பறிபோன சொகுசு கார்கள்... சுற்றுலாத்துறையின் அதிரடி நடவடிக்கை

x

சண்டிகரில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டலில் 22 லட்சம் ரூபாய் பில் கட்டாத தொழிலதிபர்களின் கார்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு இரண்டு தொழிலதிபர்கள் தங்கிவிட்டு, பணம் செலுத்தாமல் வெளியேறினர். அவர்களது சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி அவற்றை ஏலத்தில் விட சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடி காரையும், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவ்ரோலட் காரையும் வரும் 14ஆம் தேதி ஏலத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விலையாக ஒன்றரை லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்