ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.20,000 அபராதம்... விழி பிதுங்கி நின்ற கூலித் தொழிலாளி

x

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த ஆதவன் என்ற கூலித் தொழிலாளி, நெய்வேலி இந்திரா நகரில் மரவேலை செய்து விட்டு வீடு திரும்பிய போது, வடக்குத்து பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் சென்றதாகக் கூறி அபராதம் விதித்துள்ளனர்... ஆதவன் தனது வீட்டிற்கு சென்றவுடன் அவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில், அவரது வாகன எண்ணைக் குறிப்பிட்டு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால் கூலி வேலை செய்யும் தன்னால் 20 ஆயிரம் ரூபாய் கட்ட முடியாதே என அவர் திணறி வந்த நிலையில், இது குறித்து கேட்ட போது, அபராத தொகையை பதிவு செய்கையில் தவறாக பதிவாகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்கள் புகார் மனு அளித்து மேலதிகாரிகளின் அனுமதியோடு அதை திருத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்