"ரூ.2000 நோட்டை மாத்த முடியாது... வெளியே போ..." - இந்தியன் வங்கி அழிச்சாட்டியம் -குமுறும் மக்கள்..!

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற இந்தியன் வங்கி மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பகண்டை கூட்டு சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற அப்பகுதியினர் சென்றுள்ளனர். அப்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என வங்கி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. 20 ஆயிரம் ரூபாய் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கூறி உள்ள நிலையில், வங்கியின் இந்த செயலால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் அப்பகுதியினர் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்