ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கு - நடிகை ஜாக்குலின் பெர்னான்டசுக்கு ஜாமின் நீட்டிப்பு

x

மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து 200 கோடி ரூபாயை, மிரட்டி பணம் பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை தொடர்ந்து அவரது காதலியும் நடிகையுமான லீனா மரியா பாலையும் டெல்லி போலீஸ் கைது செய்தது.

சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய ₹ 200 கோடி மிரட்டி பணம் பறித்த விவகாரம்- அமலாக்கத் துறை வழக்கில் செப்டம்பர் 26-ஆம் தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமின் மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்க துறைக்கு உத்தரவிட்டது.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென அவரது வழக்குரைஞர் வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் பணைய தொகை செலுத்த உத்தரவிட்டு ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்