இறந்த காவலரின் உடலை பார்த்து ஊரே தலையில் அடித்து கதறிய சோக காட்சிகள்

x

சென்னை ஆலந்தூரில் ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் விஜயனின் உடல் சொந்த ஊரில் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஆம்புலன்ஸ் மூலம் விஜயனின் உடல் தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த சங்கிலிவாடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

விஜயனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினரும், ஊர் மக்களும் கதறி அழுதனர்.

பின்னர் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க விஜயனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்