பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம் - காரணம் என்ன?

x

பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக் கோவிலுக்கு செல்லுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்