ரோகித் சர்மாவுக்கு திடீர் காயம்.. அரையிறுதிக்கு முன் இந்தியாவுக்கு அதிர்ச்சி

x

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடிலெய்டில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதற்காக அடிலெய்டில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரோகித் சர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக வலி நிவாரணி மருந்து தெளிக்கப்பட்ட நிலையில், சிறிதுநேர ஓய்வுக்கு பிறகு ரோகித் சர்மா மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்