"WTC வருது..ரோகித்திற்க்கு ஓய்வு தேவை" - முன்னாள் வீரர் கவாஸ்கர் எச்சரிக்கை

x

மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு தேவைப்படுவதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார். ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்துப் பேசிய கவாஸ்கர், ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் ரோகித் பங்கேற்கலாம் என்றும், தற்போது அவர் ஓய்வு எடுத்துக்கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளார். குஜராத் உடனான நேற்றையப் போட்டியில் 8 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்களை மட்டுமே ரோகித் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்