ரயிலின் வெளியே இருந்த கம்பி.. உள்ளே இருந்த பயணி கழுத்தில் பாய்ந்து பலி - ஜன்னலோர பயணத்தால் மரணம்

x

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே, ரயிலின் வெளியே இருந்த இரும்பு கம்பி ஜன்னலை சேதப்படுத்தி உள்ளே பாய்ந்து, அங்கு அமர்ந்திருந்த நபரின் கழுத்தை துளைத்தது.

டெல்லியில் இருந்து கான்பூருக்கு சென்ற கொண்டிருந்த நிலனாச்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஹரிகேஷ் துபே என்பவர் பயணித்துள்ளார்.

இந்த ரயில் பிரயாக்ராஜ் பகுதி அருகே சென்றபோது, ரயிலின் வெளியே இருந்த இரும்பு கம்பி ஒன்று, ரயில் ஜன்னலை சேதப்படுத்தி உள்ளே பாய்ந்துள்ளது. இதில், ஜன்னல் அருகே அமர்ந்திருந்த ஹரிகேஷின் கழுத்தில் கம்பி துளைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்