"நான் நாய் இல்ல போலீஸ்"... குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க காவல் பணியில் இனி 'ரோபோ நாய்'

x
  • 88 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூயார்க் நகரில, 2022இல் ஒரு லட்சத்து 26 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
  • 433 கொலை குற்றங்கள் நடந்தன. நியூயார்க் நகர காவல் துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணி புரியும் நிலையில், குற்றங்களை தடுக்க டிஜிடாக் என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில் ஈடுப்படுத்தியுள்ளனர்.
  • ஹுன்டாய் நிறுவனத்திற்கு சொந்தமான பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோ நாய், ரீமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படுகிறது.
  • சுரங்க நடைபாதைகள், ஆபத்தான பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் இந்த ரோபோ நாய் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவி செய்யும் திறன் கொண்ட இந்த ரோபோ நாயிடம் மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும்.
  • தப்பிச் செல்லும் கார்களில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்தும் எந்திரத்தையும் நியுயார்க் காவல் துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்