வடிவேல் பட பாணியில் கொள்ளை..மடக்கி பிடித்த போலீசை அலையவிட்ட திருடன் - விசாரணையில் கக்கிய உண்மை

x

விருதுநகர் மாவட்டத்தில் திருடிய நகைகளை விழுங்கிய நபர் ஒருவர், நகைகளை காட்டு பகுதியில் வீசியதாக கூறி அனைவரையும் தேட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் ஆசிரியை அன்னலட்சுமி. இவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த இருவர் அன்னலட்சுமியின் கழுத்தில் இருந்து நகைகளை பறித்து தப்பி சென்றுள்ளனர். அப்போது சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்த காவலர் ஒருவர் கொள்ளையர்களை விரட்டி சென்று பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திருடர்களில் ஒருவர் நகைகளை விழுங்கி விட்டு, திருடிய நகைகளை காட்டுப்பகுதியில் வீசியதாக காவலரிடம் கூறியுள்ளர். இந்நிலையில், பொதுமக்கள் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்ட போலீசாருக்கு நகைகள் கிடைக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த போலீசார் கொள்ளையர்கள் முத்துப்பாண்டி மற்றும் அழகு ராஜிடன் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துப்பாண்டியின் வயிற்றை ஸ்கேன் செய்த போது வயிற்றில் நகைகள் இருப்பது தெரியவர, மருத்துவர்களின் ஆலோசனைப்படி நகைகள் மீட்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்