மாணவனை தாக்கி கூகுள்பே மூலம் கொள்ளை - கூகுள்பே - யே வினையாக மாறி சிக்கிய கொள்ளையர்கள்

x

கன்னியாகுமரியில், கல்லூரி மாணவனை தாக்கி, கூகுள்பே மூலம் வங்கி கணக்கிற்கு பணமாற்றம் செய்த சம்பவத்தில் 3 பேர், கூகுள்பே உதவியுடனே சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த சஜின் என்பவர், அறுக்க பன்னிபாகம் கால்வாய் அருகே நடந்து சென்றபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தாக்கியுள்ளனர் பின்னர் சஜின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி, 4 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கூகுள்பே மூலம் 28 ஆயிரத்து 300 ரூபாயை கொள்ளையர்கள் அவர்கள் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்ததுடன், கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், கூகுள்பே மூலம் பணமாற்றம் செய்த வங்கிக் கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர், அதில் கிடைத்த தகவலின் படி, தக்கலை பகுதியை சேந்த கோல்டு ஆஸ்டின், அரவிந்த், நம்பிசுரேஷ், ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்