காவலரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள்...நகை மற்றும் பணம் இல்லாததால் ஏமாற்றம் - விரக்தியில் திருடன் செய்த செயல்

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவலரின் வீட்டிற்கு திருட வந்த கொள்ளையர், பணம் இல்லாதால் அணிந்திருந்த ஜெர்கினை வைத்து விட்டு, காவலரின் புதிய ஜெர்கினை எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருணகிரி. செங்கத்தில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டினுள் நகை மற்றும் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், தான் அணிந்திருந்திருந்த பழைய ஜெர்கினை அங்கேயே வைத்து விட்டு, வீட்டில் இருந்து புதிய ஜெர்கினை கொள்ளையர்கள் திருடி சென்ற நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்