கத்தியால் குத்தி வழிப்பறி.. - வாகன சோதனையில் சிக்கிய பள்ளி மாணவர்கள் | சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னையில் ஒருவரை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திவிட்டு வழிபறியில் ஈடுபட்ட இரு சிறுவர்கள் போலீசாரின் வாகன சோதனையில் பிடிபட்டனர்.

புத்தாண்டை ஒட்டி மாமல்லபுரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் கத்தி, செல்போன் உள்ளிட்டவை இருந்த நிலையில், பிடிப்பட்டவர்களில் ஒருவரான சூர்யா என்பவர் தப்பி ஓடியுள்ளார். எஞ்சிய இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மூவரும் சென்னை மைலாப்பூரில் ஒருவரை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி விட்டு, அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. மேலும் பிடிபட்ட இரு பள்ளி மாணவர்கள் மீது சென்னை காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து செல்போன், பணம், கத்தி, வெடிகுண்டு, இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே தப்பி ஓடிய சூர்யா திருவான்மியூர் காவல்நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்