வீடு புகுந்து மூதாட்டியிடம் 10 சவரன் நகை கொள்ளை | மதுரையில் அதிர்ச்சி | madurai | thanthi tv

x

மதுரையில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை தல்லாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ராஜம் பெலிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி நகைக்கடை பஜாரில் இருந்து 10 சவரன் நகைகள் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதை நோட்ட மிட்ட 2 பேர் மூதாட்டியை பின் தொடர்ந்து வீடு வரை வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் மூதாட்டியை தாக்கி நகைகளை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், நகையை பறித்து சென்ற விஜய் மற்றும் திருடிய நகைகளை பணம் கொடுத்து வாங்கிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மதன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்