சாலையோரம் நடந்த மான் சண்டை - மயங்கி ரசித்த சுற்றுலா பயணிகள்

x

முதுமலை வனப்பகுதி அருகே சாலையோரம் சுற்றித் திரியும் புள்ளி மான் கூட்டம் காண்போர் கண்களைக் கவரும் வகையில் உள்ளது. கடந்த சில நாள்களாக முதுமலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால், வனப்பகுதியை ஒaட்டிய சாலைகளில் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றை உண்பதற்காக புள்ளி மான் கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டுள்ளன. ஒரே இடத்தில் பல மான்களைக் கண்ட காட்சி, சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்