"சாலை பணியாளர் போராட்டம்" -"பணிக்கு திரும்பவில்லையெனில்..." - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

x

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனையினை தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு, சாலை பணியாளர்களுக்கு உயர் பதவி வழங்குவது தொடர்பான எந்த விதியும் நடைமுறையில் இல்லை என தெரிவித்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாலை பணியாளர்கள், பணிக்கு திரும்பவில்லையெனில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்