மழை நீரால் மூழ்கிய மாற்றுப்பாதை - மிதந்து செல்லும் வாகனங்கள்

x

திருக்கோவிலூர் அருகே மாற்றுப்பாதையில் மழை நீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் கானை பகுதியில், சிறிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக பிரதான சாலையை ஒட்டி, விவசாய நிலத்தில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழையின் காரணமாக, மாற்றுப் பாதை நீரில் மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்