பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு.. ஜேசிபி மூலம் சாலையை உடைத்த கும்பல் - சிசிடிவி காட்சி வெளியாகி வைரல்

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 15 பேர் கொண்ட கும்பல், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை உடைத்து சேதப்படுத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்.

இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஜெஸ்டின்ராஜுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில், ஏற்பட்ட முன்விரோதத்தில் நள்ளிரவில் 15 பேர் கொண்ட கும்பலுடன் வந்த ஜெஸ்டின் ராஜ், பால்ராஜின் வீட்டிற்கு செல்ல கூடிய சாலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இதை தட்டிகேட்ட பெண் கவுன்சிலரை தாக்கி ஜெஸ்டின் ராஜ் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்