சாலை பள்ளம்.. வாகனத்தை திருப்ப முயன்ற போது பேருந்து மோதி பெண் பலி

x

கர்நாடகாவில் சாலை பள்ளதால் விபத்தில் சிக்கிய பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த உமா மற்றும் அவரது மகள் வனிதா ஹோக்கலிபுரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது சாலையில் பள்ளம் இருந்ததால், உமா இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததும், அவ்வழியாக வந்த அரசு பேருந்து உமாவின் வாகனம் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த உமா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாலை பள்ளமே உமாவின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கெனவே பெங்களூருவில் உள்ள தரமற்ற சாலைகளை 15 நாட்களுக்குள் சீரமைக்க வேண்டுமென கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில், சாலை பள்ளத்தால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்