9 பேரை பலிகொண்ட சாலை விபத்து.. உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர்.. - உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு அறிவிப்பு

x

குஜராத் சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் சொகுசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்ட பிரதமர், 9 பேரின் குடும்பத்தாருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்