அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய் - விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த முதல்வர்

x

பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு (World Gastrology Organisation), தமிழ்நாடு காஸ்ட்ரோ என்டாலஜிஸ்ட் டிரஸ்ட் (Tamil Nadu Gastroentrologist Trust) மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதனை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவப் பணிகள் இயக்குநர் வெங்கடாசலம், இரைப்பை குடலியல் துறை தலைவர் கே.ஆர். பழனிசாமி, மருத்துவ ஆலோசகர்கள் பிரம்மநாயகம், கார்த்திக் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆரோக்கிய பழக்கங்களை கடைப்பிடிப்பது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்