மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்... துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு - நாடே பரபரப்பில்...

x

மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கமென்லாக் பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுவினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடேய இரவு 10 மணிக்கு மோதல் வெடித்த‌து. இதையடுத்து, பாதுகாப்புப்படைகள் குவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. நள்ளிரவு ஒரு மணி வரை நடந்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன். பாதுகாப்புப் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்