சென்னையில் தங்கி கேரள தம்பதி செய்த நம்ப முடியாத பகீர் சம்பவம் - அதிர்ந்துபோன பிரபல 'சிம்' நிறுவனம்

x

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து, வெளிநாடுகளுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக பி.எஸ்.என்.எல். நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கேரளாவை சேர்ந்த பஷீர், சஜினா தம்பதியினர் வீட்டில் தங்கியிருந்தது தெரிய வந்தது. பூட்டிய வீட்டில் இருந்து 2 ஆயிரத்து 500 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான கேரள தம்பதியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்