பள்ளியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு.. போலீசார் தீவிர விசாரணை

x

வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில், தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். சின்ன இளையநகரத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சிவகுமார், அதே பகுதியை சேர்ந்த ஜெய்பால் என்பவரின் மகள் யாஷிகாவை 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், அங்குள்ள பள்ளியில் தூக்கில் தொடங்கியபடி இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவருடைய உடலில் காயங்கள் இருப்பதால், இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவருடைய தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்