1000 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் மீட்பு - தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

x

கரூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிவலிங்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் சீத்தப்பட்டி காலனியை அடுத்த அரசம்பாளையத்தில் உள்ள கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 அடி உயரமுள்ள கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த தகவலறிந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தனர். இதையடுத்து, அரவக்குறிச்சி வட்டாட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் சென்று சிவலிங்கத்தை மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்