ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை... துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு

x

கரூரில் ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய கோரி துணைத் தலைவர் உள்ளிட்ட ஒட்டு மொத்த உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திம்மம்பட்டியில், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வியின் கணவர் முருகன் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், நிதியை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யாமல் தடுப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊராட்சி துணைத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட்டாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்