பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை... சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு

x

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-இல் வெளியிடப்பட்ட ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை அனுமதியின்றி பயன்படுத்தி பிச்சைக்காரன்-2 படத்தை எடுத்துள்ளதாக கூறி, ராஜகணபதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்தப் படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், விசாரணையை வருகிற 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், பரணி என்ற உதவி இயக்குனர், பிச்சைக்காரன்-2 படத்தின் மூலக்கதை, தனது கதை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 18-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்