தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டின் ஒரு எச்சரிக்கை.. ஒரு பாராட்டு

x

Prosopis julifloraங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்த சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குறிப்பிட்ட தேதிக்குள் அத்தனை சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என ஊராட்சிகளுக்கு உத்தரவிடலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்