"இவங்க கொலை செய்யப்பட்டால் மட்டும் நிவாரணம்..பாகுபாடுடன் செயல்படும் பாஜக அரசு.." அதிரடி காட்டிய கர்நாடக முதல்வர்

x

மதக் கலவரங்களில் கொலை செய்யப்பட்ட ஆறு சிறுபான்மை பிரிவை சேர்ந்த குடும்பங்களுக்கு, தலா 25 லட்சம் நிவாரண நிதியை, கர்நாடக முதல்வர் சித்தராமையா வழங்கினார். இன்று பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நிதியை வழங்கினார். அப்போது பேசிய அவர், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டால் அவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கி, பாஜக அரசு பாகுபாட்டுடன் செயல்பட்டதாக, குற்றம்சாட்டினார். மதக்கலவரங்களில் உயிரிழந்த முஸ்லிம் மற்றும் இதர குடும்பங்களுக்கும் நிதி வழங்க பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியும், அதை பாஜக அரசு செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்