ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட உறவினர்கள்.. அலறிய பெண்கள்..பரபரப்பு வீடியோ

x

கிருஷ்ணகிரி அருகே, நிலப்பிரச்சினையில், உறவினர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஊத்தங்கரை அருகே உப்பாரப்பட்டி பேயனூர் பகுதியில் வசித்து வரும் அண்ணன் தம்பிகளான சட்டாம்பிள்ளை, கோவிந்தன், எல்லப்பன் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு சொந்தமாக 10 சென்ட் நிலம் இருந்துள்ளது.

இதில் சட்டாம்பிள்ளையை தவிர மற்ற 3 பேரும் தங்களுக்கு உண்டான நிலத்தின் பங்கை, வேறு ஒரு நபருக்கு விற்றதாக கூறப்படுகிறது.

நிலத்தை வாங்கிய நபர், மீண்டும் அந்த நிலத்தை சட்டாம்பிள்ளைக்கு விற்றதாக சொல்லப்படுகிறது.

20 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது கோவிந்தன், எல்லப்பன் மற்றும் பாலாஜி ஆகிய 3 பேரும் சேர்ந்து, பூர்வீக சொத்தில் உரிமை இருப்பதாக கூறி, சட்டாம்பிள்ளையின் நிலத்தில் தங்களுக்கு உண்டான பங்கை தரக்கோரி, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் மீண்டும் தகராறு ஏற்படவே, ஒருவரை ஒருவர் கடப்பாறை, கம்பு, கற்கள் கொண்டு தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், சசிகுமார், அன்பு ஆகிய இருவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்