தாய்க்காக கோடிக்கோடியாய் பணம் அனுப்பிய மகன் - "காலியான A/C ரூ.2.10 கோடி எங்கே?" கோவையில் அதிர்ச்சி

x

இடிகரை பகுதியை சேர்ந்த ரங்கநாயகி என்பவரின் மகன் ராஜேஷ், வெளிநாட்டில் தொழில் செய்து வரும் நிலையில், அவ்வப்போது தனது தாயின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி வருவதாக தெரிகிறது. இதனிடையே, ரங்கநாயகியின் சகோதரர் பாலகிருஷ்ணன், அவரது மகள் கவிப்பிரியா, மருமகன் ஆனந்தகுமார் ஆகியோர் ரங்கநாயகியிடம் இரண்டு கோடியே 10 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த ராஜேஷ், இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பாலகிருஷ்ணன், கவிப்பிரியா, ஆனந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரம், கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்