12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுக்கும் சிட்ரங் - டிங்கோனா தீவு- சந்திவிப் இடையே கரையை கடக்கும்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள சிட்ரங் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று வங்காளதேசம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும்,

இந்த புயல் கரையைக் கடந்தபிறகுதான் வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்குவதற்கு சாத்தியக்கூறு இருக்கும் என்பதை கணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com