"ரூ. 4,250 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்பு ""மீட்பு வேட்டை தொடரும்"

x

திருவண்ணாமலையில், மீட்கப்பட்ட கோயில் நிலம் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வடக்கு கோபுரம் பகுதியில் அம்மனி அம்மன் கோபுரம் எதிரே, இடிக்கப்பட்ட அம்மனி அம்மன் மடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் எ.வ.வேலு பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு வேட்டை தொடரும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்