ரியல் 'சார்பட்டா' கபிலன் காலமானார் - நாக்-அவுட் கிங் என புகழப்பட்ட பாக்சர் ஆறுமுகம் | Knock-out king

x

சென்னையில் குத்துச்சண்டை போட்டிகள் கோலோச்சி வந்த காலக்கட்டத்தில் சார்பட்டா பரம்பரைக்காக விளையாடி புகழ்பெற்றவர் ஆறுமுகம். சுமார் 128 தொழிற்முறை குத்துசண்டை போட்டிகளில் விளையாடி, அதில் நாக்-அவுட் முறையில் போட்டியாளர்களை வீழ்த்தியதன் மூலம் நாக்-அவுட் கிங் என போற்றப்பட்டார். இவரது வாழ்க்கையை மையப்படுத்தியே சார்பட்டா படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரமான கபிலன் பாத்திரத்தை பா. ரஞ்சித் உருவாக்கினார். கடந்த மூன்று மாதங்களாக கல்லீரல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பாக்சர் ஆறுமுகம் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் சாய்தீனா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்