"மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தயார்" - டெல்லி காவல்துறை தகவல்

x

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங், தங்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்துள்ளனர். பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில், டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாலியல் தொல்லை புகாரில் பிரிஜ் பூஷன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகக் கூறினார். இந்த விவகாரத்தில் நேரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் எண்ணம் கொண்டால், உடனடியாக வழக்கு பதிவு செய்ய தயார் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்