காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து ஜடேஜா விடுவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து, இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயால் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காயம் காரணமாக இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயால் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இருவருக்கும் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் மற்றும் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்