உணவு பார்சலில் எலி தலை விவகாரம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி தகவல்

x

ஆரணியில் உணவு பார்சலில் எலி தலை இருந்த சம்பவம் எதிரொலியாக சம்மந்தபட்ட ஓட்டல் சீல் வைக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த உணவகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள 5 கோடி மதிப்பீட்டில் கட்டபட்டு வரும் இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பொரியலில் எலி தலை உள்ள சம்பவத்தில் முதல்கட்டமாக 35 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.

பின்னர், உணவகம் சீல் வைக்கபடும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்