மின்னல் வேகத்தில் பரவும் எலி காய்ச்சல்.. பள்ளி மாணவன் மரணம்.. கேரளாவில் பலி 31ஆக உயர்வு

x

கேரளாவில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 13 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர். கேரளாவில் டெங்கு, எலிக்காய்ச்சல். சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் பரவி வருகிறது. திருச்சூரைச் தனீஷ்க் என்ற பள்ளி மாணவன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், திருவனந்தபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விஜயன் என்பவரும் உயிரிழந்தார். இதன்மூலம், எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்