"பெண்களிடம் அத்துமீறல்; கண்டித்ததால் ஆத்திரம்; தீவைத்து 11 பேரை கொன்ற கொடூரன்"அதிர வைக்கும் சம்பவம்

x

மெக்சிகோ நாட்டில் மதுபான விடுதிக்கு தீ வைத்ததாக நம்பப்படும் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மெக்சிகோவின் எல்லை நகரமான San Luis Rio Coloradoவில் அமைந்துள்ள மதுபான விடுதியில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி அங்கு இருந்து வெளியேற்றப்பட்ட நபர், அவ்விடுதிக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இறந்த 11 பேரில் 4 பேர் பெண்கள். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய நபரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்